skip to main |
skip to sidebar
கிராமத்து கறி குழம்பு
தேவையான பொருட்கள்
- 1. ஆட்டுகறி - 3/4 கிலோ
- 2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
- 3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
- 4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
- 5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
- 6. மிளகாய் வற்றல் - 10
- 7. தனியா - 1 மேஜைக்கரண்டி
- 8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
- 9. பட்டை, லவங்கம்
- 10. கசகசா - 1 தேக்கரண்டி
- 11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
- 12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
- 13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- 14. உப்பு
- 15. பூண்டு - 5 பல்
- 16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை
- கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும்.
- கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
- இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
- இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
- இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
- கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.