கிராமத்து கறி குழம்பு

தேவையான பொருட்கள்

  • 1. ஆட்டுகறி - 3/4 கிலோ
  • 2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
  • 4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 6. மிளகாய் வற்றல் - 10
  • 7. தனியா - 1 மேஜைக்கரண்டி
  • 8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • 9. பட்டை, லவங்கம்
  • 10. கசகசா - 1 தேக்கரண்டி
  • 11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
  • 12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
  • 13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 14. உப்பு
  • 15. பூண்டு - 5 பல்
  • 16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை

  • கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும்.
  • கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
  • இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  • இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
  • இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
  • கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.