சில்லி சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்:
Chilly chicken fry
கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை:

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

சிக்கன் டிக்கா

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - கால் கிலோ.
தயிர் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ஏலக்காய் - 3
மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு
கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிது

செய்முறை:

கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும்.

தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையினை கோழித்துண்டுகள் மீது பூசி 4 மணி நேரம் நன்கு ஊற விடவும்.

இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து 350 டிகிரி சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும் (தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது). 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.

பின்னர் எடுத்து பரிமாறவும். தேவையானால் அதன் மீது கொத்தமல்லி, தக்காளி சாஸ், வெள்ளரிக்காய், கேரட் தூவிக் கொள்ளலாம்.

பங்களா பாத்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்
பால் -2 கப்
மில்க்மெய்ட் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
உலர்ந்த திராட்சை - 5
ஏலக்காய் பொடி
உப்பு
நெய்

செய்முறை:

வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும்.

ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும்.பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

பிறகு இதை சிறிய கப்புகளில் ஊற்றி அதன் மீது முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்.

பருப்பு உருண்டை


தேவையான பொருட்கள்:

வறுத்த கடலைப் பருப்பு - 1 கப்.

பயத்தம் பருப்பு - 1 கப்.

அரிசி - 1 கப்.

சர்க்கரை - 2 கப்.

தேங்காய் துறுவல் - கால் கப்.

நெய், ஏலம் - தேவைக்கேற்றப்படி.

செய்முறை:

பொடித்த பருப்பு, அரிசி ஆகியவற்றில் சர்க்கரையை பாகாக செய்து ஊற்றவும்.பின்னர் தேவையான அளவுக்கு தேங்காய் துறுவல், ஏலம் ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். சூப்பரான இனிப்பு பருப்புஉருண்டை தயார்!


கேரட் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 1 கப்
காரட் 5
பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 2 கப்
வெண்ணெய் 2 கப்

மைதா 2 கப்
முட்டை 1
வெனிலா 1 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த திராட்சை, முந்திரி 8

உப்பு, நெய் தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும்.

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். அதன் மேற்பரப்பில் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம்.

இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.

பிரெட் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • பிரெட் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)
  • பிரெட் ஸ்லைஸ் - நான்கு துண்டு
  • முட்டை - ஒன்று வேகவைத்து (வட்டவட்டமாக நருக்கியது)
  • மையானஸ் - ஒரு மேசைகரண்டி
  • சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
  • உப்பு - ஒரு பின்ச்
  • டொமேட்டோ கெட்சப் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் மையானஸ்,சில்லி சாஸ்,டொமேட்டோ கெட்சப்,உப்பு தேவைபட்டால் மிளகுதூள் ஒரு சிட்டிக்கை) எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.
  • பிரெட்டை ஒரங்கள் நருக்கி விட்டு அதை முக்கோண வடிவில் கட் பண்ணவும்.
  • எல்லா முகோன வடிவ பிரெட் துண்டுகளிலும் கலக்கி வைத்ததை தடவி விட்டு ஒரு ஒரு துண்டு வெகவைத்த முட்டை துண்டை வைத்து மூடவும்.

ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள்

  • மாவை குழைக்க:
  • மைதா - ஒரு கப்
  • பட்டர் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - கால் தேக்கரண்டி
  • பால் - இரண்டு மேசக்கரண்டி
  • பில்லிங் செய்ய
  • பொடேடோ - ஒன்று (வேகவைத்து மசித்தது)
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகு தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - ஒரு பின்ச்
  • கொத்து மல்லி தழை - 2 மேசை கரண்டி ( பொடியாக நருக்கியது)
  • எண்ணை+ பட்டர் (அ) நெய் கலவை - பொரிக்க தேவையன அளவு

செய்முறை

  • மாவை குழைத்து கொள்ளுங்கள்.
  • பொடேடோவில் கலக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நல்ல் மசித்து கொல்ளுங்கள்.
  • சிறிய உருண்டையை வைத்து வட்ட வடிவில் (அ) சதுர வடிவில் மாவைதேய்த்து அதி இந்த பில்லிங்கை பரவலாக வைத்து சதுர வைவாக மூடி இருபக்கமும் மாவை தடவி முஈண்டும் மெதுவாக தேய்க்கவும்.
  • தேய்த்து தவ்வாவில் எண்ணை பட்டர் (அ) நெய் கலவையை கொஞ்சமா ஊற்றி ஒரு ஒரு பரோட்டாவாக பொரித்தெடுக்கவும்.

தால் ரொட்டி

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு -100 கிராம்
  • கோதுமை மாவு - கால் கிலோ
  • சிறிய கேரட் - துருவியது
  • மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
  • மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • இஞ்சி,பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - 2டீஸ்பூன்

செய்முறை

  • குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக கட் செய்த வெங்காயம் சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சல்,மிளகாய் பொடி,கேரட் துருவியது சேர்த்து நன்கு வதக்கி பாசிப்பருப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நிதானமாக 2 விசில் விட்டு எடுக்கவும்.நன்கு வெந்த பின்பு மசித்துக் கொள்ளவும்.
  • பின்பு அதனோடு உப்பு, கோதுமை மாவை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணிர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரமாவது வைக்கவும்.
  • அதனை தேவையான அளவிற்கு உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் மாவு போட்டு பரத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.விருப்பப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் விட்டும் சுடலாம்.
  • சுவையான தால் ரொட்டி ரெடி.இதனை துண்டு போட்டு அப்படியேயும் சாப்பிடலாம்.அல்லது ரைத்தா உடன் சாப்பிடலாம்.

வெள்ளை பணியாரம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 500 கிராம்,
  • குண்டு உளுத்தம் பருப்பு - 125 கிராம் (4க்கு 1),
  • பால் - 1 கரண்டி,
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி,
  • உப்பு - 2 தேக்கரண்டி,
  • ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி.

செய்முறை

  • அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன், பால், சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் வைக்கவும். (மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்).
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு சின்ன கரண்டியால் மொண்டு ஊற்றவும்.
  • அரி கரண்டியால் எண்ணெயை பணியாரத்தின் மேலே அள்ளி ஊற்ற, உப்பி வரும்.
  • வெள்ளையாக இருக்கும் போதே, திருப்பி விட வேண்டும்.
  • மறுபுறமும் சிவக்காமல் வெள்ளையாக இருக்கும் போதே எண்ணெயை வடித்து எடுக்கவும்.
  • அப்படியே எல்லா மாவையும் ஊற்றி எடுக்கவும்.

குறிப்பு:

1) முக்கியமான விஷயம், மாவு தோசைப்பதத்திற்கு மேல் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. 2) சிவக்க விட கூடாது. 3) 3 அங்குல விட்டத்தில் இருந்தால் போதுமானது. 4) மாவை ஒரே முறையாக ஊற்ற வேண்டும், நிறுத்தி நிறுத்தி ஊற்றக்கூடாது. 5) ஒரு முறைக்கு ஒன்று தான் ஊற்ற வேண்டும். 6) சுட சுட சூடாக வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

சிம்பிள் சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள்

  • மைதா - 1 கப் (200 கிராம்),
  • பெரிய வெங்காயம் - 1,
  • குட மிளகாய் - 1,
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
  • சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
  • தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி,
  • சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி,
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
  • சர்க்கரை - 1 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • வெங்காயம், குட மிளகாயை சது துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.
  • மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ரொம்ப மெலிதாகவோ, மொத்தமாகவோ இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.
  • சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.
  • சுலபமான, சுவையான சில்லி பரோட்டா ரெடி.

குறிப்பு:

தேவையானால் நறுக்கிய வெங்காய தாள், கொத்தமல்லி தழைகளை தூவலாம். மடித்து தேய்ப்பதால், பரோட்டா போல் அடுக்கடுக்காக வரும்.....

samayal tips



வெஜ் ரோல்ஸ்

தேவையானப் பொருட்கள்
  • மேல்மாவிற்கு:
  • மைதா மாவு - 1 1/2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • ஈஸ்ட் - அரை தேக்கரண்டி
  • இளம் சூடான தண்ணீர் - கால் கப்
  • சீனி - ஒரு தேக்கரண்டி
  • பூரணத்திற்கு:
  • உருளைக்கிழங்கு - 2
  • தக்காளி - ஒன்று
  • கேரட் - ஒன்று
  • கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
  • வெங்காயம் - பாதி
  • உள்ளி - 4 பற்கள்
  • கடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கிராம்பு, ஏலம் - சிறிது
  • மிளகாய் தூள் - ஒரு மேசைகரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்
  • கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
  • கறிவேப்பிலை - சிறிது
  • தண்ணீர் - 2 கப்
  • எண்ணெய் - அரை லிட்டர் பொரிப்பதற்கு


தக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். காரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும். கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும். வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும். கறுவா(பட்டை), கிராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து வைக்கவும்.




இளம் சூடான தண்ணீரில் சீனியை கரைத்து அதில் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும். பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள்(மணிநேரங்கள்) வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அதனுள் வெட்டிய கோஸ், லீக்ஸ், கேரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.


பின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.


பின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.






தேய்த்த மாவின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும். பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)









பின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்).





ஒரு பிரஷ்ஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி ரஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டவும்.










பிரட் தூள் உருளை முழுவதும் ஒட்டும்படி நன்கு பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.






இதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்து, உள்ளே மசாலா வைத்து, உருட்டி, ப்ரட் துகள்களில் தேய்த்து எடுத்து வைக்கவும்.










பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.







இப்போது சுவையான வெஜ்-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.







குறிப்பு;
மாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். கறியை தண்ணீர் வற்றும் வரை விடும் போது அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.

கேரட் வடை

தேவையானப் பொருட்கள்

  • துருவிய கேரட் - ஒரு கப்
  • கடலை மாவு - 2 ஸ்பூன்
  • மைதா - ஒரு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
  • பொடியாக நறுக்கிய புதினா - 1/2 கப்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1/4 கப்
  • உப்பு - 1/2 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
  • எண்ணெய் - 1 1/2 கப் (பொரித்து எடுக்க)
கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போடவும்
வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பட்டூரா

தேவையான பொருட்கள்

  • மைதா- இரண்டு கோப்பை
  • தயிர்-அரைக் கோப்பை
  • தண்ணீர்- அரைக்கோப்பை
  • பேக்கிங் பவுடர்-ஒரு தேக்கரண்டி
  • ஆப்பச் சோடா- ஒரு சிட்டிக்கை
  • எண்ணெய்- இரண்டு தேக்கரண்டி
  • உப்பு- ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • மைதாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,மற்றும் சோடாவைப் போட்டு ஜல்லடையில் ஜலித்து கொள்ளவும்.
  • பிறகு அதில் தயிரையும் எண்ணெயையும் ஊற்றி பிசறிய பின் தண்ணீரை சிறுது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின்பு மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சையளவு பத்து அல்லது பன்னிரெண்டு உருண்டைகளாக உருட்டவும்.
  • பின்பு உருட்டிய உருண்டைகளை சற்று அடர்த்தியான அகன்ற பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • இந்த சுவையான பட்டூராவை சூடாக,சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.

நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்

  • 1. கோதுமை மாவு - 2 கப்
  • 2. பாதாம் - 10
  • 3. முந்திரி - 20
  • 4. நெய்
  • 5. உப்பு

செய்முறை

  • பாதாம் நீரில் போட்டு ஊறவைத்து தோல் நீக்கவும்.
  • பாதாம் முந்திரியை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
  • இதை மாவு, உப்புடன் கலந்து நீர் சேர்த்து தேவைக்கு நெய் விட்டு சப்பாத்தி மாவாக பிசையவும்.
  • இதை சப்பாத்தியாக தேய்த்து, மேலே சிறிது நெய் தடவி, மாவு தூவி 4 ஆக மடித்து மீண்டும் தேய்த்து மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
  • இதை நெய் விட்டு தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.

இது ருசியானது, சத்தானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

கோதுமை மசாலா வடை

தேவையானப் பொருட்கள்;

* கோதுமை ரவை - ஒரு கப்
* வெள்ளை உளுந்து - 1/2 கப்
* பெரிய வெங்காயம் - 1/2 கப்
* பச்சைமிளகாய் - 2
* இஞ்சி - ஒரு சின்ன துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
step 1
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
step 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
step 3
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
step 4
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
step 5
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
step 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
step 7
சுவையான கோதுமை மசாலா வடை தயார்.

அடை (அ) கார தோசை

தேவையான பொருட்கள்

* அரைக்க:

* 1. இட்லி அரிசி - 4 கப்
* 2. துவரம் பருப்பு - 1 கப்
* 3. மிளகாய் வற்றல் - 10
* 4. பூண்டு - 5 பல்
* 5. உப்பு
* தாளிக்க:
* 1. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* 2. உளுந்து + கடலை பருப்பு - 1 பெரிய குழிக்கரண்டி
* 3. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* 4. கொத்தமல்லி, கருவேப்பிலை


செய்முறை

* அரிசி, பருப்பை இரவே ஊர வைக்கவும்.
* மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
* இதை வழக்கம்போல் தோசை வார்க்கவும்.


குறிப்பு:
இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும். காரம் அதிகமாக சேர்த்தால் எதுவும் இல்லாமல் வெறும் அடை தோசை சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க விரும்பாதோர் பூண்டு இல்லாமலும் செய்யலாம். மாவு புளிக்க தேவையில்லை. அரைத்த உடனே தோசை செய்யலாம்.

கேரட் வடை

தேவையானப் பொருட்கள்

* துருவிய கேரட் - ஒரு கப்
* கடலை மாவு - 2 ஸ்பூன்
* மைதா - ஒரு ஸ்பூன்
* கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
* இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
* பொடியாக நறுக்கிய புதினா - 1/2 கப்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
* பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1/4 கப்
* உப்பு - 1/2 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1/2 கப் (பொரித்து எடுக்க)

கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

step 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

step 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போடவும்.
step 3
வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.